உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி யில் இருந்த பழமையான பாபர் மசூதியை இடித்து தள்ளிவிட்டு, அந்த இடத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் ஜனவரி 22-ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. அரசியலுக்காகவே கட்டிமுடிக்கப்படாத ராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “இந்து மத சாஸ்தி ரங்களின்படி முழுமையாக கட்டி முடிக்கப்படாத ராமர் கோவிலுக்கு பிர திஷ்டை நடத்த முடியாது. இதனால் இந்த நிகழ்வில் எந்த சங்கராச்சாரியாரும், துறவிகளும் கலந்துகொள்ள மாட்டோம் என அறிவித்துவிட்டார்கள். முக்கியமாக ராமர் கோவில் திறப்பு விழாவை பாஜக, ஆர்எஸ்எஸ், விஎச்பி மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் ஒரு அரசி யல் நிகழ்வாகவே மாற்றிவிட்டனர். ராமர் கோவில் முழுமையாக முடிக்கப்பட்ட பின்பே நாங்கள் அங்கு சென்று தரி சனம் மேற்கொள்வோம்” என்று அவர் தெரிவித்தார்.